Tuesday, March 16, 2010

மது!!

மது!!
பார்வையில் போதை ஏற்றுபவள்.
கன்னத்து மச்சத்தால் உள்ளத்தில் அச்சானவள்.
சிறிய கண்கள். சிரிக்கும் பொழுது மறையும்.
ரோஜா மொட்டில் பனித்துளி எப்பொழுதும் இருக்கும்.
அவள் புன்னகை நம்மை தேவலோகத்தில் மிதக்க செய்யும்.

மது!!
அவளை தூரத்தில் பார்த்தாலே தியான நிலை அடைந்து விடுவேன்.
என்னோடு இருக்கும் பொழுது சொல்லவா வேண்டும்??
அந்த சொர்க்கத்தில் உள்ளே புகுந்தான் கயவன்.
அவளை பெற்றவன்.
என் உயிரை என்னிடம் இருந்து பிரித்தான்.
ஆனால், நாளை மீண்டும் என்னோடு இருப்பாள்,
என் பக்கத்து வீட்டு குட்டி தேவதை, மது!!

பி.கு.1: நான் ப்ளாக் ஆரம்பிச்சதுலே இருந்து 'என்னை பத்தி கவிதை எழுது'னு ஒரே அன்பு தொல்லைங்க (அமைதி! அமைதி!). அப்படி கேட்ட அன்பு தொல்லை ச்சே மதுக்காக ஒரு மொக்கை கவிதை. அது மட்டும் இல்ல, மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆனா மாதிரி ஒரு பீலிங்.

பி.கு.2: " 'தியான நிலை'னு சொல்லி இருக்கியே, நீ நித்யானந்தாவுக்கு சொந்தமா?" அப்படின்னு யாரவது பின்னூட்டம் போட்டீங்க, ரணகளம் ஆகி போய்டும் ஆமா. x-(

பி.கு.3: மொக்கை போஸ்ட்ன்றதுனாலே, நீங்க எப்படி எல்லாம் மொக்கையா யோசிச்சு கமெண்ட் பண்ணுவீங்கனு என் சூப்பர் பிரைன் யோசிச்சதோட பயன் தான் பி.கு.2. எப்பூடி?

3 comments:

  1. அந்த சொர்க்கத்தில் உள்ளே புகுந்தான் கயவன்.
    அவளை பெற்றவன்.

    .........எங்கே அந்த "கயவன்?" ரெண்டு அடி இந்த ஆளுக்கு போட்டு விட்டு செல்லவும்.

    ReplyDelete
  2. @Dhanya

    No Bad words. Mummy paavam. avvvvv :'(

    @Chitra

    Ranagalamaaidum.


    Yaarukko :)

    ReplyDelete