அவள்: ஏய்.. எப்படி இருக்கே?
நான்: ம்ம். நல்லா இருக்கேன்.
அவள்: கொட்டிக்கிட்டியா?
நான்: கொட்டிக்கிட்டியா கிட்டிக்கிட்டியானு பேசுன வந்து மண்டைல கொட்டிடுவேன் ஆமா.
அவள்: ஹா ஹா ஹா.. மொதல்ல வீட்டுக் கதவுக்குள்ளே நொழய முடியுமான்னு பாரு.
இப்படியெல்லாம் என்னை பார்த்து கேள்வி கேட்குற தைரியம் இந்த உலகத்துலேயே ஒருத்தருக்கு தாங்க இருக்கு. அது, என் தங்க தங்கை டீனா. அவள் வாய் பராக்கிரமங்களில் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.
அப்பா: டீனா. டெக்ஸ்ட் புக்ஸ் மாத்திரம் படிச்சா போதாதுமா. Extra Knowlede க்கு சப்ஜக்ட் சம்பந்தபட்ட புக்சும் படிக்கணும்.
டீனா: டாடி, புக்ஸ் படிக்க சொல்றத எப்போ நிறுத்த போறேங்க? மா, எங்கே இருந்து மா பெத்தீங்க அப்பாவே?
அம்மா: ம்ம்க்கும். நான் பெத்திருந்தா தங்கமால இருந்திருக்கும். உங்க பாட்டி பெத்தது அப்படி தான் இருக்கும்.
அப்பா: ??!!
(ஹ்ம்ம். இவள எங்கே இருந்து தான் பெத்தாங்களோ?)
(இது, அவ 3 வயசா இருக்கும் போது உதிர்த்தது)
அம்மா: இன்னிக்கு அப்பாக்கும் எனக்கும் கல்யாண நாள். கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஹோடேல்க்கு போலாம்.
(டீனா அழத்துவங்குகிறாள்)
அம்மா: ஏம்மா அழறே?
டீனா: நீங்களும் டாடியும் கல்யாணம் பண்ணி போயட்டீங்கனா, நானும் ஆஷாவும் அனாதை ஆயடுவோம்ல. எங்களை யார் பார்த்துக்குவா?
அம்மா: ??!!
(எப்படியெல்லாம் யோசிக்கிறா?)
டீனா: ஏய் உன் இளைய’தொல்ல’பதிய பத்தி SMS அனுப்பிச்சேனே படிச்சியா?
நான்: இப்படியெல்லாம் SMS அனுப்புனே, ‘சிங்கம்’ அசிங்கமாய்டும் ஆமா.
டீனா: ஹே ஹே.. நாங்க ‘சுறா’வ புட்டு செஞ்சு சாப்புடுவோம்ல.
நான்: கிர்ர்ர்.
(என்ன ஒரு வில்லத்தனம்?)
பார்த்தீங்களா மக்களே இந்த கொடுமையே? நான் டீனா கிட்ட பஞ்சர் ஆகாத நாளே இல்ல. அவ வாயாலயும் கையாலயும் அடிக்கிறத தினமும் வாங்கி, நான் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ ஆய்ட்டேன்.
என் அப்பாவே அவர் ஆபீஸ்ல, அவரோட சிம்ம கர்ஜனைக்காக ‘The Terror’னு கூப்பிடுவாங்களாம். இப்போ இது எதுக்குன்னு கேக்குறீங்களா? ஒருமுறை தலைப்ப படிச்சு பாருங்க, என் தங்கச்சிய பத்தின உண்மை வெளங்கும். :)
inda blogkugu correct ah na title idu :)
ReplyDeleteIn btw, why dont u blog on Vijay ???
//In btw, why dont u blog on Vijay ?//
ReplyDeleteஅதானே...
இப்படி ஒரு டீனா இருக்கும் போது, உங்கள் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. டீனா error இல்லை, சூப்பர்.
ReplyDelete@ Vimal & Karki
ReplyDeleteThanks. Ilayathalapathy nu kandippa en blog le oru label irukkum. Aana avara pathi neraya paer eluditaangale. Naan enna pudhusa eludhuradhu? :)
@Chitra,
Sila samayam kalakalappa irukkum, pala samayam kaikalappa irukkum. :)